கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் குறித்தும், பாதிப்பு , உயிரிழப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தற்போது 29.36% ஆக உள்ளது. புதிதாக 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…