கொரோனா வைரசோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்-மத்திய சுகாதாரத்துறை.!

Default Image

கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் குறித்தும், பாதிப்பு , உயிரிழப்பு மற்றும்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தற்போது 29.36% ஆக உள்ளது. புதிதாக 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என  தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என லாவ் அகர்வால் தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்