கொரோனா காலகட்டத்திலும் குறையாத ஜாதி வெறியைக்கண்டிக்கிறோம் – மக்கள் நீதி மையம்!

Published by
Rebekal

கொரோனாவால் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ள இந்த காலகட்டத்திலும் தலித் இன மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய நீதிக்கேடுகளை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் தலித் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளும் இந்த பேரிடர் காலத்தில் நடந்து வருகிறது என மக்கள் நீதி மையம் சார்பாக அக்கட்சியின் ஆதி திராவிட நல மாநில செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் இந்த 144 போடப்பட்டுள்ள காலகட்டத்திலும், தலித் இன மக்களுக்கு எதிராக கொலைகள்- 14, மலக்குழி மரணம்- 4, பாலியல் வன்புணர்வு – 5, சாதி ஆணவப்படுகொலைகள்- 2, சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்- 5, தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை- 3, கல்வி நிலையங்களில்சாதியப் பாகுபாடு- 1, மயானம், மயானப்பாதை பிரச்சினை- 2, அரசுப் பணியாளர்களின் பாரபட்சம்-3,கொத்தடிமை- 1, தாக்குதல்கள்- 41 ஆகியவை நடைபெற்றுள்ளது.

தெரிந்தே இத்தனை மரணங்கள் மற்றும் கொடுமைகள் என்றால் தெரியாமல் எவ்வளவு இருக்கும். எனவே மக்கள் நீதி மையம் இந்தச்சாதி வெறியினை வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அரசு நிர்வாகமும் ஜாதி ஆதிக்கப்போக்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுத்திட வேண்டும் எனவும் மக்கள் நீதிமயம் வலியுறுத்துவதாக பூவை ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

8 minutes ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

28 minutes ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

1 hour ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

15 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

16 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

17 hours ago