Categories: இந்தியா

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்- மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா..!

Published by
murugan

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடத்துவோம் என சமீபத்தில் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்க தலைவர் உடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில்  இந்த முடிவும் எட்டப்படவில்லை, இதனால் திட்டமிட்டபடி டெல்லி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். நேற்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட சுமார் 200 விவசாய சங்கங்களை சார்ந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

கடந்த முறை போலவே இந்த முறையும் நீண்ட நாள் போராடும் நடக்கும் என்பதால் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை டிராக்டர் மூலம் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். மத்திய அரசு டெல்லி எல்லை பகுதியில் போலீசார் மற்றும் துணை இராணுவத்தை  குவித்து விவசாயிகளின் வருகையை  தடுத்து வருகின்றனர்.

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

விவசாயிகள் டெல்லியில் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட சில பாதைகளை தவிர மற்ற சாலையில் அனைத்தும் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு கம்பிகளை சாலையை பதித்தும், சாலையில்ஆணியை அடித்து தடுத்து வருகிறார்கள். நேற்று விவசாயிகள் டெல்லி நோக்கி திரண்டு வந்ததால் தடையை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசினர்.

மேலும் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று செய்தியாளர்களிம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அனைத்து தரப்புகளையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என தெரிவித்தார்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago