உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கம் – பிரதமர் மோடி

Published by
Venu

2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் குஜராத் உட்பட நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வியில் வலுவடையும்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கான எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம்.உலக ஆரோக்கியத்தின் நரம்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும்.

நம் நாட்டில், வதந்திகள் விரைவாக பரவுகின்றன. வெவ்வேறு நபர்கள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தடுப்பூசி தொடங்கும் போது வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது .இது தொடர்பான வதந்திகள் ஏற்கனவே பரவத் தொடங்கிவிட்டன.கொரோனாவிற்கு எதிராகப் போராடுவது தெரியாத எதிரிக்கு எதிரானது என்று நாட்டின் மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய வதந்திகளைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்.ஒரு பொறுப்பான குடிமகனாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை உறுதி செய்யாமல் பரப்ப வேண்டாம்.நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்புமருந்து சென்றடைவதை உறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…

5 minutes ago

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

46 minutes ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

1 hour ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

12 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

13 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

13 hours ago