கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் கொரோனா மூன்றாவது அலையில் 30,000 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால், ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதில் தலைநகர் டெல்லியில் தான் நிலைமை மோசமாக உள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில் கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…