WBCS exam:சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வி – கொந்தளித்த பாஜக..!

Published by
Edison

மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வியால் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் 22  ஆம் தேதியன்று மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்பு கடிதம் அளித்த புரட்சிகர தலைவர் யார் ? என்ற கேள்வியும்,விடி சாவர்க்கர், பிஜி திலக், சுக்தேவ் தாப்பர் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகிய நான்கு விருப்பங்களும் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து சாவர்க்கர் என்ற பதிலும் இடம் பெற்றிருப்பது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக,மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது,”மேற்குவங்க சிவில் சர்வீஸ் (WBCS) தேர்வுத் தாள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் செல்லப்பிராணித் திட்டத்தை விளம்பரப்படுத்தியது”, என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) CAPF (மத்திய ஆயுதப்படை காவல்துறை) தேர்வுக்காக “BJP அளித்த கேள்விகளை” கேட்டதாக குற்றம் சாட்டினார்.

கடந்த வாரம் மாநிலச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “யுபிஎஸ்சி பாஜகவின் கேள்விகளைக் கேட்கிறது.முன்னதாக,யுபிஎஸ்சி ஒரு பக்கச்சார்பற்ற அமைப்பாக இருந்தது, ஆனால் தற்போது பாஜக அதற்கு கேள்விகளைக் கொடுக்கிறது. விவசாயிகளின் போராட்டம் குறித்த யுபிஎஸ்சி தாளில் உள்ள கேள்வி கூட அரசியல் உள்நோக்கம் கொண்டது”,என்று தெரிவித்தார்.

சாவர்க்கர்:

இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்,இந்திய அரசியல் பிரமுகர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். அவர் 1922 இல் ரத்னகிரியில் சிறையில் இருந்தபோது இந்துத்துவாவின் இந்து தேசியவாத அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

21 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

30 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

39 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

47 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

54 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago