கொரோனா பரவலுக்கு கழிவு நீர் ஒரு காரணமாக உள்ளது- ஐஐடி விஞ்ஞானிகள்!

Published by
Surya

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து காந்திநகர் ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், அந்த கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு உறுப்பான SARS-CoV-2 படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸின் தன்மையை விட, மே 27-ந் தேதி வைரஸின் தன்மை அதிகமாக உள்ளது என தெரிவித்தனர்.

இதற்கான காரணம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. மேலும், இந்த கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இத்தாலியை தொடர்ந்து, தற்பொழுது இந்தியாவிலும் கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என தெரிவித்த விஞ்ஞானிகள், அதை எப்படி தடுப்பது என்று மேற்கொண்டு ஆய்வுகள் மூலம் தெரியவரும் என தெரிவித்தனர்.

Published by
Surya

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago