மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.! சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.!

Published by
murugan

சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம்  மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது.

தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள்.

பலர் படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறைகளுக்கு சமூக ஊடகங்களில் உதவி கோருகின்றனர். இருப்பினும், அத்தகைய மக்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. படுக்கை, ஆக்ஸிஜன்,  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கின்றனர்.

இருப்பினும், வதந்திகளை பரப்புகின்றனர் என அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் தங்கள் குறைகளை எழுப்புகிறார்கள் என்றால், அது வதந்திகள் பரப்புகின்றனர் என்று சொல்ல முடியாது.

வதந்திகளை பரப்புவது என்ற பெயரில் எந்த மாநிலமும் நடவடிக்கை எடுக்க கூடாது என மத்திய, மாநில அரசை எச்சரித்தது. சமீபத்தில் தந்தைக்காக ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்தவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago