எச்சரிக்கை : இந்தியாவில் மீண்டும் கிடுகிடுவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை…!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 509 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 5,127 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,28,57,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 509 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,39,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,181 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,89,583 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 66,30,37,334 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 81,09,244 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்