எச்சரிக்கை : ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு…!

Published by
லீனா

கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா விமான நிறுவன, இணையதள பக்கமான எஸ்ஐடிஏ-ல் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வேர்ட் விபரம், டிக்கெட் விபரம், கிரெடிட் கார்ட் விவரங்கள் கசிந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன இணைய தளமான சர்வரில் சில சிக்கல்கள் நிறைந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் உலக அளவிலான பயணிகளில் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்குமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல்களை, பயணிகளின் விவரங்களை சேமிக்கும் டேட்டா பிராசஸரிடம் இருந்து, கடந்த பிப்.25ம் தேதி இந்த தகவல்களை பெற்றோம். இதில் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. பாஸ்வேர்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு அறிவுறுதியுள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

6 minutes ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

35 minutes ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

1 hour ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

2 hours ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

13 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

14 hours ago