ஆம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது அதி உச்ச உயர் புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கே, 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வாங்க தேசத்தின் ஹதியா பகுதியில் நாளை மறுநாள் மாலை கரையை கடக்கும் என்றும், மணிக்கு 180 முதல் 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மாவட்டங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அம்பன் புயல் தாக்கம் கடினமாக இருக்கும் எனவும், இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…