சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் கொரோனா நோயாளியை அங்குள்ள வார்டு சிறுவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் எனும் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய 50 வயதுடைய பெண் நோயாளி ஒருவரை அந்த பராமரிப்பு மையத்தில் பணியாற்றக்கூடிய சிறுவன் ஒருவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்மணி இருக்கக்கூடிய அறையில் யாருமில்லாத நேரத்தில் வந்து அச்சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் யாரும் இல்லாத நேரம் வந்ததாகவும், ஒரு முறை அந்த சிகிச்சை பெற்று வரக்கூடிய பெண்மணியின் குடும்பத்தினர் பார்த்து சத்தமிடமே அவன் தப்பி ஓடி விட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அச்சிறுவனை கைது செய்துள்ள போலீசார் மேலும் அந்த வார்டில் கவனக்குறைவாக பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…