“போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” -ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!

Published by
Edison

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் நம்புவதாக இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் புடினை தொடர்புகொண்டு  பேசியதாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:

“உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனைக்கு அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும்,உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் கவலைகள் குறித்தும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபருக்கு தெரிவித்தார்.குறிப்பாக உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நாடு திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்,என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,இந்தியா தனது நடுநிலைமையை கைவிட வேண்டும் என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக ரஷ்யாவின் உலகளாவிய கண்டனத்தில் சேர வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

15 minutes ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

53 minutes ago

LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

2 hours ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

2 hours ago

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

3 hours ago