ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள கேஷோரைபட்டான் பகுதியில் இன்று காலை மழை வெள்ளத்தால் அதிக அளவில் நனைந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேருக்கு மேல் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…