டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி கடந்த 25ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, விவேக் ராம் சவுத்ரி விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து வந்த நிலையில், புதிய தளபதியாக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர், 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 1982ஆம் ஆண்டு டிசம்பரில், சவுத்ரி இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார்.
இந்திய விமானப்படையில் மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய இவர், 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…