மூடும் நிலைமையில் தவிக்கும் வோடஃபோன்.! மூடினால் நேரும் ஆபத்து.!

Published by
Dinasuvadu desk
  • ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு  92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
  • வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த  2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு  பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் மூடப்பட்டன.

சில நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR பாக்கித் தொகையால் பல நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து  தொலைத் தொடர்பு  நிறுவங்கள் இணைந்து மொத்தமாக  ரூ.1.47 லட்சம் கோடி மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  தனது AGR பாக்கித் தொகையான ரூ.60 கோடியை  செலுத்தி விட்டது. ஜியோ நிறுவனத்தால் நஷ்டத்தை சந்தித்து வரும் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் 17-ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.

இதைத்தொடர்ந்து வோடஃபோன் ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்தாவிட்டால் இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.  அப்படி வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

வோடஃபோன் நிறுவனம் 37 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் சேவைகளை கொண்டு எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. மேலும் மற்ற வங்கிகளிடம் இருந்தும்  வோடஃபோன் நிறுவனம் கடன் வாங்கி உள்ளது.

வோடஃபோன் நிறுவனம் மூடினால் அதன் சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்து குறைவான தொகைக்கு ஏலத்தில் விடுவார்கள் ஆனால் அந்த தொகை வங்கி கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது தெரியவில்லை. இந்த நிறுவனம் மூடப்பட்டால் நேரடியாக 13,500 ஊழியர்களும் , மறைமுகமாக ஏராளமான ஊழியர்களும் வேலையை இழக்கின்ற சூழல் ஏற்படும்.

தற்போது தொலைத்தொடர்பு 4 நிறுவனங்களாக உள்ள நிலையில் ஒருவேளை 2 நிறுவனங்களாகச் சுருங்கும் பட்சத்தில் அந்த 2 நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் .மேலும்  அந்த நிறுவனம் வைப்பதுதான் கட்டணம் என்ற நிலை ஏற்படலாம்.

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago