ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் ஆந்திராவின் தலைநகராக அமராவதி மாற்றப்பட்டது. மேலும் அமராவதியை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால் கடந்த மே மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அமராவதியை தலைநகராக மற்ற நடைபெற்ற பணிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல முறைகேடுகள் செய்து இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆந்திராவின் தலைநகரை ஜெகன்மோகன் ரெட்டி மாற்ற விரும்பி உள்ளார். இதை தொடர்ந்து அரசு நிர்வாகத்திற்கு விசாகப்பட்டினமும் , சட்டமன்றத்திற்கு அமராவதியும் , நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்து உள்ளார்.
தலைநகரை மாற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க 2 குழுக்களை ஜெகன்மோகன் ரெட்டி அமைத்தார். இந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்தனர். இந்த அறிக்கைகளை மந்திரிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் அறிக்கை அளித்துள்ளது.
ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டு தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 151 இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…