ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய விசாக் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் கூறுகையில்,”நாங்கள் இந்துஸ்தான் கப்பல் கட்டடத்தினரிடமிருந்தும், நிர்வாகத்தின் உயர் மட்டக் குழுவிலிருந்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஏற்க்கனவே எல்ஜி பாலிமர்ஸில் எரிவாயு கசிவு ஏற்பட்டு 12 மரணத்திற்கு வழிவகுத்த இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து துறைமுக நகரத்தில் மூன்றாவது பெரிய விபத்து இந்த சம்பவம் ஆகும்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…