விரைவில் விசா இன்றி பாகிஸ்தானின் இந்த இடத்திற்கு மட்டும் செல்லலாம்!

Published by
மணிகண்டன்

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவர் சீக்கியர்களின் கடவுளாக கருதப்படுகிறார். இவர் இந்திய எல்லையில் இருந்து சில கிமீ தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் எனுமிடத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக இருந்ததாக சீக்கியர்களால் நம்பப்படுகிறது. அதனால் ராவி நதிக்கரையில் தர்பார் சாகிப் எனும் பெயரில் அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் அதிகம் பேர் சென்று வருவர். அவர்கள் விசா மூலம் மட்டுமே அங்கு சென்று வந்துள்ளனர்.

இதனை தீர்க்கும் வகையில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் படி இந்தியாவின் குருதாஸ்பூர் எனும் ஊரிலிருந்து கர்தார்பூர் ஊரை இணைக்கும் இணைப்பு சாலை ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

மேலும், கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக அண்மையில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரியில் நடைபெற்றது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த 20 அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு வரும் பக்தர்களுக்கு சேவை வரி வசூலிக்க பாகிஸ்தான் அரசு கோரியது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது. அடுத்ததாக இந்திய அதிகாரிகள் யாரும் நியமிக்கப்பட கூடாது என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. முதலில் ஒரு நாளைக்கு 5000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  பிறகு பக்தர்களின் எண்ணிக்கை கூட்டப்படும். என பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் மாதம் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல் சீக்கியர்கள்  விசா இன்றி பாகிஸ்தானுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

50 minutes ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

2 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

2 hours ago

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

14 hours ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

14 hours ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

15 hours ago