பிரிக்ஸ் மாநாடு : எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்கேற்பு

Published by
Venu

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்குபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17-ஆம் தேதி )நடைபெறுகிறது.காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.மேலும் இந்த மாநாட்டில்,தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ,பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ( Jair Bolsonaro),சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஐந்து நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை ஈடுசெய்யும் வழிகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது.குறிப்பாக கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.எனவே எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.இதனிடையே இன்று நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.மேலும் எல்லை பிரச்சினை நடத்த பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதன்முறையாக மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago