மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காரை சிங்க்ஹோல் ஒன்று முழுவதும் விழுங்கியுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. தற்போது அங்கிருக்கும் கட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிற கார் ஒன்று முழுவதுமாக சிங்க்ஹோலில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் இந்த காரின் முன்பகுதி சக்கரங்கள் உள்ளே சென்றது, அதனை தொடர்ந்து காரின் பின்பகுதியும் பின்னர் முழுவதுமாக கார் தண்ணீரில் மறைந்துவிடுகிறது.
இதனால் இந்த இடத்தில் இதற்கு முன் கிணறு இருந்தது என்பது தற்போது வீடியோவால் வெளிவந்துள்ளது. இந்த சிங்க்ஹோல் வாகன நிறுத்துமிடத்திற்கு கீழே மூடப்பட்ட கிணறு என்பதை கண்டுபிடித்துள்ளனர். இது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்களால் மூடப்பட்டு இவ்விடத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர் என்றும் தெரிவந்துள்ளது. கனமழை காரணத்தால் இந்த கிணறு தண்ணீரால் நிரம்பியுள்ளது. மும்பையில் கனமழை பெய்து வரும் இந்நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…