கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ரூ. 1லட்சம் அபராதம், 2ஆண்டுகள் சிறை – ஜார்க்கண்ட் அரசு.!

Published by
Ragi

கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதமும், 2ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலு‌ம், கொரோனா தொற்றுக்கான மருந்தான கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில், நேற்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இனி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணியாமல் வெளியே செல்வது, பொது இடங்களில் எச்சில் துப்புவது என நடவடிக்கைகளை மீறி செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6,485பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது 3,367பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் ,3024பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

1 hour ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

3 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

4 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

5 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

6 hours ago