மணலில் புதைக்கப்பட்ட 300வருட பழமையான சிவன் கோயிலை கண்டெடுத்த கிராமவாசிகள்.!

Published by
Ragi

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை ஆந்திராவில் நெல்லூரில் உள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து 300 ஆண்டுகள்
பழமையான வரலாற்று சிறப்புமிக்க நாகேஸ்வர சுவாமி கோயிலை கண்டெடுத்துள்ளனர். ஆந்திராவின் நெல்லூரில் உள்ள செஜெர்லா தொகுதியின் கீழ் உள்ள சில இளைஞர்கள் இணைந்து பென்னா ஆற்றில் மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட போது கோவிலை கண்டுபிடித்துள்ளனர். பரசுராமன் அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட இந்த கோயில் 1850ல் பென்னா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமமே மூழ்கியது.

சுமார் 80ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகள் முழு கட்டமைப்பையும் உள்ளடக்கியதாக தங்கள் பெரியவர்கள் கூறியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதனையடுத்து மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள விரும்பியவர்களை கட்டமைப்பு சேதப்படும் என்று கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த பெருமல்லாபாடு பகுதியை சுற்றியுள்ள மக்கள் கோயிலை காண வருவதாகவும், எனவே சில போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் உதவி இயக்குநர் ராமசுப்பா ரெட்டி கூறியுள்ளார். மேலும் கிராமவாசிகளின் உணர்வை மதிக்கும் வகையில் கோயிலை மீட்டெடுக்கும் திட்டத்தை தாங்கள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக தங்களது ஊர்களுக்கு திரும்பிய இளைஞர்கள் சிலர் கோயிலை கண்டுபிடிக்க மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டதாகவும், இது கிராமவாசிகளின் கனவு என்றும், பெரியவர்கள் வாயிலாக மண்ணில் புதைக்கப்பட்ட இந்த கோயிலை கண்டெடுத்து எங்கள் அனைவரின் கனவும் நனவாகியுள்ளதாக இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த கோயிலை மீட்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்து கோவில்கள் பாதுகாப்பு குழுவின் தலைவரான சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கோவிலின் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

47 minutes ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

1 hour ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

4 hours ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

4 hours ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

5 hours ago