பிரிட்டனில் படித்து வந்த விகாஸ் துபேயின் மகனிடம் போலீசார் விசாரணை.!

Published by
மணிகண்டன்

கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 60 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடியான விகாஸ் துபே. உத்திர பிரதேச போலீசார் இவரை பிடிக்க சென்றபோது, 8 காவலர்களை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், விகாஸ் துபேவை கைது செய்தனர். பின்னர் அவரை கான்பூர் கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பியோட முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.

பின்னர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் விசாரித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மூத்த மகன் ஆகாஷ் துபே பிரிட்டனில் மேற்படிப்பு படித்துவந்துள்ளார். அவர் தற்போது, ஊரடங்கு காரணமாக  லக்னோவில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாட்டி வீட்டில் தங்கி இருந்த விகாஸ் துபேயின் மகன் ஆகாஷ் துபேயிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மிகவும் பதட்டமாக காணப்பட்டாராம். தனது தாயை பற்றி மட்டுமே அதிகமாக போலீசாரிடம் கேட்டறிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு ஆகாஷ் துபே மிகவும் பதட்டமாக இருந்ததால் சரிவர பதில் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.

உத்திர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஷ் துபே, பல்வேறு நகரங்களில் கோடிக்கணா மதிப்புள்ள சொத்துக்களை தனதுடமையாகியுள்ளார். நில அபகரிப்பு மூலமாக மட்டுமே வருடம் சுமார் 10 கோடி சம்பாதித்து வந்துள்ளாராம். மேலும், நில அபகரிப்புக்கு மட்டுமே சுமார் 100 அடியாட்களை விகாஸ் துபே வேலைக்கு வைத்திருந்தாராம்.

விகாஷ் துபே மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் பெயரில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago