போலீசாரை சுட்டு கொன்ற விகாஷ் துபே.! கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.!

Published by
Ragi

கான்பூரில் ரவுடியாக வலம் வரும் விகாஷ் துபேவை கண்டுபிடிக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் அவுரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஃபோர்ட் எகோஸ்போர்ட்   கார் ஒன்று கண்டறியப்பட்டது. விகாஷ் துபேயின் பெயரில் இருந்த அந்த கார் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து நேபாள நாட்டுடான உத்திரப் பிரதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் விகாஷ் துபே, அவுரியா தேசிய நெடுஞ்சாலை வழியாக மத்திய பிரதேசத்திற்கு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அல்லது பிந்த்-மொரேனா வழியாக ராஜஸ்தானிற்கு சென்றிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து குவாலியர் மற்றும் பிந்த் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தியதோடு, சந்தேகமற்ற நபர்களையும் , வாகனங்களையும் சோதனை செய்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி உத்திரப் பிரதேசம் மற்றும் நேபாள எல்லையில் விகாஷ் துபேயின் புகைப்படத்தையும் சுவரொட்டியையும் ஒட்டியுள்ளனர்.மேலும் காரை போலீசாரை திசை திருப்ப விட்டு சென்றிருக்கலாம் என்றும் தடவவியல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து விட்டு சென்ற காரிலிருந்து ரத்த கறையுடன் கூடிய கைக்குட்டை, மூன்று அடையாள அட்டைகள், பர்ஸ், எலைட் லக்னோ பள்ளியின் ஐடி கார்டு, விலை மதிப்புடைய காலணி ஆகியவை கைப்பற்றப்பட்டு, அதிலுள்ள கைரேகைகளை தடவவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கார் ஆவுரியா – திபியாபூர் நெடுஞ்சாலை அருகே கண்டறியப்பட்டதாகவும், காரின் ஆவணங்களை சோதனை செய்த போது லக்னோவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த கேங்க்ஸ்டர் குறித்து உள்ளூர் மக்களிடையே விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள டவரை வைத்து செல்போன் எண்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago