உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய சென்றபோது, அப்போது பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்டனா்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளும் தலைமறைவாகினர். அந்தச் சம்பவத்தில் 21 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி தலைமறைவாக இருந்த விகாஸ்துபேவை மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்த விகாஸ்துபேவை கான்பூருக்கு போலீசார் அழைத்து வந்தபோது கடந்த 10-ஆம் தேதி அதிகாலை அவா்கள் வந்த வாகனம் கவிழ்ந்து. இதைப் பயன்படுத்தி விகாஸ் துபே போலீசாரின் துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தபோது, போலீசார் அவரை சரண் அடையும்படி கூறியுள்ளனர்.
ஆனால், விகாஸ்துபே போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டர் செய்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விகாஸ் துபே உள்ளிட்ட 6 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனா்.
இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு விசாரரித்தது.
அப்போது, விகாஸ் துபே என்கவுன்ட்டா் குறித்து வியாழக்கிழமை (அதாவது இன்று ) அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினாா். இதைத்தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
8 போலீசார் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் விகாஸ் துபே உள்ளிட்ட 6 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனா். 4 போ் கைது செய்யப்பட்டனா். 11 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…