தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.
பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.
அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பிஜேபியில் சேர்வதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பிஜேபி தேசிய செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் அக்டோபர் 8ம் தேதி பிஜேபியில் சேர்ந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக இருப்பதால், வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக பிஜேபி சார்பில் களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…