விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும்.. சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்.!

Published by
murugan

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு அந்த பணத்தை செலுத்தாமல் மோசடிசெய்துவிட்டு லண்டனுக்கு தப்பி விட்டவர் விஜய் மல்லையா. இதையடுத்து, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா மீது  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை  பணப்பரிமாற்றம் செய்ததாக எஸ்.பி.ஐ வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்த மனுவில் பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே கர்நாடக உச்சநீதிமன்றம்  பிறப்பித்த ஒரு உத்தரவை மீறி மல்லையா பணப் பரிமாற்றம் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு மல்லையா குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்ததால் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த தீர்ப்பு செல்லும், மேலும், விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Published by
murugan
Tags: VijayMallya

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

7 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

20 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

31 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

38 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

53 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago