பெங்களூரில் கொட்டித் தீர்த்த கனமழை..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் அப்பகுதியில் வெல்ல நீர் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் நகரில் உள்ள ஆர் புரம் மற்றும் சிவாஜி நகர், திருமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சிக்கபனவரா ஏரி, நாகவாரா, ஹெப்பல் நிரம்பி வழிந்தன. ஷீலவந்தகெரே, ராசன்ஹள்ளி, அதிகபட்சமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 103 மி.மீ மழை பதிவானது. மேலும் ஜக்கூரில் 92 மி.மீ., மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்