பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி , நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் தான் நம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் வழக்கம் போல, ஆளும் பாஜக ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார்.
அதன் பின்னர், தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெ ற உள்ளது. அதில், பாஜக சார்பில் ஜகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார். இவர் மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஆவர்.
இவருக்கு உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாடி தலைவருமான மாயாவதி , வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கர் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலிலும் திரௌபதி முர்முவுக்கு தான் ஆதரவு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…