ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது- சி.பி.ராதாகிருஷ்ணன் !

Published by
Muthu Kumar

ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசாமல் வளர்ச்சிக்காக மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று பாஜகவின் மூத்த தலைவரும் ஜார்கண்ட் மாநிலத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல், அரசியல் தலைவர்கள் ஆளுநர் பதவிக்கு வரும்போது, அரசியல் ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் ஆர்.என்.ரவி இருவரும் அந்தந்த மாநில அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜக அல்லாத அரசுகள் நடத்தும் மாநிலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களும் அரசியலில் ஈடுபடுவதாகவும், கூறப்பட்டுவருகின்ற நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பேசிய அவர், தமிழக வரலாற்றில் இதுவரை மூன்று பேர் ஒரே நேரத்தில் கவர்னர்களாக பதவி வகித்ததில்லை, இது ஒட்டுமொத்த மாநிலத்திற்கே பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் அவர் ஆளுநராக பதவியேற்றதும், தமிழகம் மற்றும் ஜார்கண்ட் மாநில கலாச்சார பாலமாக இருந்து இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

7 mins ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

18 mins ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

41 mins ago

அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!

சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…

45 mins ago

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…

58 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

2 hours ago