கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் கடைசி நிமிட வீடியோ ஒன்று, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குறிப்பாக, அவர் கூறிய “Bye daddy.. Bye” என்ற வார்த்தை, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.48 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எர்ராகடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் 26 ஆம் தேதி கொரோனா தோற்றால் உயிரிழந்தார். மேலும் அவர் உயிரிழப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் “பாய் டாடி பாய் (Bye daddy bye)” என்ற வார்த்தை, காண்போரின் கண்களை கலங்கவைக்கிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “என் வென்டிலேட்டரை விட்டு எடுக்கும்போது, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று சொன்னபோதும் மருத்துவமனை ஊழியர்கள் அதை அகற்றினர். அப்பா 3 மணிநேரமாக நான் மூச்சுவிட ரொம்ப கஷ்டப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதாக உணர்கிறேன். என்னால் இதற்க்கு மேல் சுவாசிக்க முடியவில்லை. நான் இறக்கப்போகிறேன் அப்பா, பாய் டாடி பாய்” என கூறிய சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்தார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…