அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள ஆழமான ஏரியில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார். இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டிய மங்காச்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜௌடாங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஏரியில் இருந்து ஒரு வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காணவில்லை என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார். மூத்த அதிகாரி சிகே உபாத்யாய் கூறுகையில், ஓட்டுநர் உட்பட ஐந்து வீரர்கள் ரோந்துக்காக எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து 20-30 அடி ஆழமான ஏரியில் விழுந்துள்ளது.
அப்போது மூன்றுவீரர்கள் பாதுகாப்பாக நீச்சலடித்து வெளிய வந்தனர். காணாமல் போன இருவரில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொருவரை இன்னும் காணவில்லை. தேடுதல் பணி நடந்து வருகிறது என்று உபாத்யாய் கூறினார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…