ஏரியில் பாய்ந்த வாகனம்.., எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு..!

Default Image

அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள ஆழமான ஏரியில் நேற்று  எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார். இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டிய மங்காச்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜௌடாங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏரியில் இருந்து ஒரு வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காணவில்லை என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார். மூத்த அதிகாரி சிகே உபாத்யாய் கூறுகையில், ஓட்டுநர் உட்பட ஐந்து வீரர்கள் ரோந்துக்காக எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து 20-30 அடி ஆழமான ஏரியில் விழுந்துள்ளது.

அப்போது மூன்றுவீரர்கள் பாதுகாப்பாக நீச்சலடித்து வெளிய வந்தனர். காணாமல் போன இருவரில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொருவரை இன்னும் காணவில்லை. தேடுதல் பணி நடந்து வருகிறது என்று உபாத்யாய் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்