கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை – 70 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.!

Published by
Rebekal

கேரளாவில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை பூசாரி சொன்னதும் குளத்துக்குள் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் ஏரியின் நடுவே உள்ள அனந்தபத்மநாப ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 70 ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை வசித்து வருவதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளதுடன், அந்த முதலையை பபியா எனவும் பெயரிட்டு மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முதலை இதுவரை ஏரியில் இருந்து அந்த கோவிலுக்குள் வந்ததே கிடையாதாம். ஆனால் முதன்முறையாக நேற்று முன்தினம் இந்த முதலை கோவிலுக்குள் நுழைந்து உள்ளது. இந்த முதலை அசைவம் எதுவுமே சாப்பிடாமல், வெறும் சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுமாம். மேலும் கோவில் பிரசாதத்தை இது விரும்பி சாப்பிடும் எனவும் பலர் கூறிவருகின்றன.
இது அசைவ உணவுகள் சாப்பிடாத முதலை என்றாலும் 70 ஆண்டு பழமையான பெரிய முதலை என்பதால் கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததும் அங்கிருந்த அனைவரும் பயந்து அலறி உள்ளனர். ஆனால் அந்த முதலையை கோவில் பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் என்பவர் உள்ளே போ என லேசாக அதட்டியபடி கூறியதும் உடனடியாக அந்த முதலை விறுவிறுவென ஏரிக்குள் இறங்கி விட்டதாம். பூசாரியின் சொல்லுக்கு முதலை உடனடியாக கட்டுப்பட்டது அங்கு உள்ள பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

12 minutes ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

35 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

2 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago