வாடிகன் நகர் : போப் பிரான்சிஸுடன் பிரதமர் மோடி சந்திப்பு ….!

Default Image

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தியா உட்பட 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த 16வது ஜி 20 அமைப்பின் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ அவர்களின் அழைப்புக்கு இணங்கி பிரதமர் மோடி அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில்கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி அவர்கள் தனி விமானத்தில் இத்தாலி சென்ற நிலையில், இன்று வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடி அவர்கள் போப் பிரான்சிஸ் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்