பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்.
சென்னை – மைசூர் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரயில்களுக்கு பெரும்பாலும் பயணிகளின் ஆதரவு இருந்தும் வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50% அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகுந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மே 17 முதல் 16 பெட்டிகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இந்த ரயிலின் ஆக்கிரமிப்பு விகிதம் 130 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதால், பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…