இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக மோடி அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ வர்மன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும், தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசிக்கான சோதனையில் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், தடுப்பூசிகள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும், அதை மலிவு மற்றும் மானிய விலைகளில் விற்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…