இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக மோடி அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ வர்மன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும், தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசிக்கான சோதனையில் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், தடுப்பூசிகள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும், அதை மலிவு மற்றும் மானிய விலைகளில் விற்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…