கடற்கரைக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் அவசியம்…!

Default Image

புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து, இன்று முதல் புதுச்சேரி கடற்கரையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைக்கு வருபவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, இன்று காலை முதல் போலீசார் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்