பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் காணொலி வாயிலாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் நாடு முழுவதும் 18 வயதை கடந்த 79 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 38 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் கொரோனா தடுப்பு வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…