மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படுவார் என நினைக்கிறேன்.3 கட்சிகளின் ஆலோசனைக்கு பின் கூட்டாக அறிவிக்கப்படும். பத்னாவிசு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது,ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.மேலும் பாஜக குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…