மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார்.
முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மஹாராஷ்டிராவில் அஜித்பவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒன்றாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ முடிந்தால் சிவசேனா கட்சியை உடைத்து பாருங்கள். அப்படி, கட்சியை பிரித்தால் மஹாராஷ்டிரா தூக்கமுடியாது.’ எனவும், ‘ பாஜக அரசானது, இந்திய ஜனநாயகத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.’ எனவும் காட்டமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…