மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார்.
முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மஹாராஷ்டிராவில் அஜித்பவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒன்றாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ முடிந்தால் சிவசேனா கட்சியை உடைத்து பாருங்கள். அப்படி, கட்சியை பிரித்தால் மஹாராஷ்டிரா தூக்கமுடியாது.’ எனவும், ‘ பாஜக அரசானது, இந்திய ஜனநாயகத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.’ எனவும் காட்டமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…