Categories: இந்தியா

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. இறுதி கட்டத்தில் சுரங்க விபத்து மீட்பு பணிகள்.!

Published by
மணிகண்டன்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் என பலர் 17 நாட்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலி துளையிடும் முறை எனும் மனிதர்கள் மூலம் துளையிடும் முறையில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இன்னும் சில மணிநேரங்கள் தான்… மகிழ்ச்சி செய்தி கூறிய சர்வதேச மீட்புக்குழு.!

துளையிடும் பணிகள் முழுதாக நிறைவு பெற்று விட்டது. இன்னும் ஒரு குழாய் மட்டும் உள்ளே செலுத்த வேண்டி இருந்தது. அந்த பணியும் தற்போது நிறைவு பெற்றதை தொடர்ந்து, தொழிலார்களை மீட்கும் பணியை மீட்புப்படையினர் மும்முரமாக துவங்கியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களை உடனடியாக வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்தினுள் தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில மணிநேரத்தில் தொழிலாளர்கள் வெளியே வந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சியான செய்திகள் நமக்கு கிடைக்க உள்ளன.

Recent Posts

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

34 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

36 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

1 hour ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

2 hours ago

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

3 hours ago