உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு ;197 பேர் காணவில்லை

Published by
Dinasuvadu desk

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 32 உடல்கள் மீட்பு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட திடிர் பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தேடுதல் மற்றும் நிவாரணம் :

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை  தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி), தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில பேரிடர் பதிலளிப்பு படை (எஸ்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றின் 600 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாமோலி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தின் விளைவாக துண்டிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களுக்கு ரேஷன், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற ஐ.டி.பி.பி ஜவான்களுக்கு நன்றி தெரிவிக்க உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 35 பேர்:

என்டிபிசியின் தபோவன்-விஷ்ணுகாட் திட்டத்தில் சுரங்கப்பாதையில் டைவர்ஸ் உள்ளிட்ட இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2.5 கி.மீ நீளமுள்ள ‘ஹெட்ரேஸ் டன்னல்’ (எச்.ஆர்.டி) க்குள் 25-35 பேர் சிக்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கப்பாதையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும்,  சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்குச் செல்ல சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஒரு அதிகாரி கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

30 minutes ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

1 hour ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

3 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

4 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

5 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

5 hours ago