உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தனது முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். உட்கட்சி பிரச்சனை தொடர்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், அங்கு உள்கட்சியில் சில குழப்பங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியில் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைமை அலுவலகத்திற்கு புகாரளித்தனர்.
இதன்காரணமாக இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தார். அதன்பின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மயூரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ராஜினாமா செய்துள்ளது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை, விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…