பிரதமரின் சொந்த தொகுதியில் நிகழ்ந்த அவல நிலை! பசியை போக்க புல்லை சாப்பிட்ட குழந்தைகள்!

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்புசாரா தொழிலில் ஈடுபடுவோர்கள் அதாவது, தினக்கூலியாக வேலை செய்து வந்தவர்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியியான உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பசியை போக்க குழந்தைகள் புல்லை உப்பு கொண்டு சாப்பிட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

வாரணாசி தொகுதியில் உள்ள கோய்ரிபுர் எனுமிடத்தில் கட்டிட வேலையை நம்பி தினக்கூலியாக வேலை செய்யும் குடும்பங்கள் இருந்து வருகின்றன.அதில், ராணி, பூஜா, விஷால், நீர்ஹூ, சோனி, கோலு ஆகிய குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர்.  அவர்கள் குடும்பத்தினர் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள். ஆனால், தற்போது வேலையின்றி இருப்பதால், உணவின்றி அந்த குடும்பங்கள் தவித்து வந்துள்ளன. 

இதில் அந்த குழந்தைகள், ஊரடங்கின் முதல் நாள் அன்று இறந்தவரின் இறுதி சடங்கு நடைபெற்ற வீட்டில் சாப்பாடு சாப்பிட்டுள்ளார். இரண்டாம் நாள் தோட்டத்தில் உருளைக்கிழங்கு பறித்து சாப்பிட்டுள்ளனர். மூன்றாம் உணவின்றி, ஆடு மாடுகளுக்கு வழங்கப்படும் புல்லை உப்பு, தண்ணீர் கொண்டு சாப்பிட்டுள்ளனர். 

இந்த அவல நிலையினை பத்திரிக்கை நிருபர் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, அந்த மக்களுக்கு தற்போது 15 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து, தற்போது அம்மக்களின் பசி போக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை என்றால், அரசு அதிகாரிகள் செய்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin