18 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்பு

Published by
மணிகண்டன்

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். செய்யாத அந்த கொலைக்காக அப்பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மலாப்பூர் கிராமத்தில் வசித்து வந்த ராகுல் கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என கூறி, ஆதாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இத புகாரின் அடிப்படியில், அந்த பெண் கொலைசெய்யப்பட்டதாகவும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம், துணிகள் ஆதாரங்களாக கிடைத்ததன் பெயரில், தந்தை சுரேஷ், சகோதரர் ரூப் கிஷோர், அண்டை கிராமத்தில் வசித்து வரும் தேவேந்திரா உள்ளிட்ட 3 பேரை ஆதாம்பூர் போலீசார் 2019 பிப்ரவரி 18 அன்று கைது செய்தனர். ஒரு வருடத்திற்கு மேலாக சிறை தண்டனையும் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல், காணாமல் போன தனது சகோதரியை பவுரா கிராமத்தில் சகோதரியின் காதலரான ராகேஷின் வீட்டில் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மேலும், அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரர் ஆதாம்பூர் காவல்நிலைய அதிகரிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் போலீசாரால் தாக்கப்பட்டு பின்னர் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தனது சகோதரி காணாமல் போன வழக்கை பொய்யான கொலை வழக்காக மாற்றி தனது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட ஆதம்பூர்  காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago