சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகான் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். சேத்தன் சவுகான், சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்ஷக் தால் போன்றவற்றின் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970-களில் கிரிக்கெட் அணியில் சுனில் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரரான சவுகான் களம் இறங்குவார்.
இந்நிலையில், சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார். மேலும், சேத்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர் பெயரை சாலைக்கு வைப்பதன் மூலம் தற்போது இருக்கிற மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு அவரை நினைவு கூறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சேத்தன் சவுகான் மறைவு அம்மாநிலம் காட்டிய அலட்சியத்தால் உட்பட்டது என்று ஒருபக்கம் புகார்கள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…