கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்த மகள்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,அம்மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்,உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கடுமையான மூச்சுத்திணறலுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டிருந்த தாய்க்கு,அவரின் மகள்கள் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்தனர்.இருப்பினும்,மூச்சுத்திணறல் சரியாகாததால் அவர்களின் தாய் உயிரிழந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு,உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு பெண் தனது கணவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காததால்,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் அளித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…